( காரைதீவு சகா)
பிறந்திருக்கின்ற 2023 ஆம் ஆண்டில் அரச அலுவலகங்களின் கடமைகள் நேற்று(2) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
அந்த வகையில், காரைதீவு பிரதேச சபையின் அலுவலக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண வைபவம் சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நேற்று காலை ஆரம்பமானது.
சபைச் செயலாளர் அ.சுந்தரகுமார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
முன்னதாக, தேசிய கொடி ஏற்றி சத்திய பிரமாணம் எடுக்கும் வைபவம் இடம்பெற்றது.
தொடர்ந்து தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உரையாற்றினார்.




Post A Comment:
0 comments so far,add yours