(எஸ்.அஷ்ரப்கான்)

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கிணங்க கல்முனை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபரின்  வேண்டுகோளுக்கிணங்க, கல்முனைக்குடி -01 கிராம சேவகர்  பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.றினோஸா தலைமையில் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தரின் அலுவலகத்தில் அண்மையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஐ.எல்.ஏ.அஸீஸ், உணவு பாதுகாப்பு குழு அங்கத்தவர் மெளலவி ரீ.ஆர்.நெளபர், சிவில் பாதுகாப்பு குழு தலைவர் எஸ்.அஷ்ரப்  என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொதிகளை வைத்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours