வட்ஸ்  UK அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை  பெரியநீலாவணை தொடர்மாடியில் இலவசமாக நடத்தப்படுகின்ற மாலைநேரவகுப்பில்  கலந்துகொண்டு  இவ்வருடம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் பணமும் வழங்கிவைக்கப்பட்டதுடன் 70 இற்கு மேல் புள்ளியினைப்பெற்ற 20 மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு அவ் வகுப்பின் அதிபர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்றது

இம்மாணவர்களுக்கான பரிசில்களையும் பணத்தினையும் லண்டனில் இருந்து வருகைதந்த வட்ஸ் அமைப்பின் முன்னால் தலைவர் ஜெயபால்  அவர்களின் சொந்த நிதியில் வழங்கிவைக்கப்பட்டன

இந்நிகழ்வில்  லண்டனில் இருந்து வருகைதந்த வட்ஸ்  UK அமைப்பின் முன்னால் தலைவர் ஜெயபால் மற்றும் அவரது பாரியார் இருவரும் கலந்துகொண்டு இப்பரிசில்களை வழங்கியதுடன் தரம் 1 தொடக்கம் 9 வரையான 115 மாணவர்களுக்கு இனிப்புப் பண்டமும் அவரால் வழங்கிவைக்கப்பட்டது.

அதே வேளை 2018 ஆம் ஆண்டில் இருந்து இப்பிரதேச மாணவர்களின் கஷ்டநிலையினை அறிந்து இவ் மாலைநேர வகுப்பினை நடாத்திவருகின்ற வட்ஸ் UK அமைப்புக்கு பெற்றோர்கள் நன்றிதெரிவித்துள்ளனர்.
















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours