( வி.ரி.சகாதேவராஜா,எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது
மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனத்தை அடுத்து
அங்குள்ள பழைய மாணவர் மன்றத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(8)
சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஏலவே
இருந்த அதிபர் திருமதி ரிப்கா அன்சார் சிறப்பாக செயல்பட்டு வந்த வேளையில்
புதிய அதிபர் ஒருவரின் நியமனம் இடம்பெற்று இருப்பதை நாங்கள் ஏற்க முடியாது.
சாய்ந்தமருது கல்வியை சீரழிக்க வேண்டாம் மாணவரின் கல்வியை சீரழிக்காதே!
அதிபரின் இடமாற்றம் திட்டமிட்ட சதியா?
கல்வி அதிகாரிகளே! சாய்ந்தமருது கல்வியை திட்டமிட்டு அழிக்கிறீர்களா?
எமக்கு அதிபர் றிப்கா மெடமே வேண்டும்.
புதிய அதிபர் வேண்டவே வேண்டாம்!என்று கோஷங்களை எழுப்பி பதாகைகளை ஏந்தி பழைய மாணவர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.





Post A Comment:
0 comments so far,add yours