( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள்
ஆலயத்தின் முதலாவது வருடாந்த அலங்கார உற்சவத்தின் பாற்குட பவனி இன்று (30)
ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்துக்கு மேற்கு புறமாக உள்ள சிவன் ஆலயத்தில்யத்து பாற்குடபவனி ஆரம்பமானது.
முன்னே
ஆலய பரிபாலன சபை தலைவர் கி. ஜெயசிறில் பிரதான கும்பம் தாங்க, ஆலோசகர்
வி.ரி.சகாதேவராஜா பிரதான மடை தாங்க ,ஆலய குரு சிவஸ்ரீ ச. கோவர்த்தனசர்மா
வழிகாட்டலில் பாற்குடபவனி சிறப்பாக நடைபெற்றது.
உற்சவகால
பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ
ச.கோவர்த்தன சர்மா சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு
தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல் அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம்
பெற்று எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த
உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .
இந்த
பத்து நாள் அலங்கார உற்சவ திருவிழாக்காலங்களில் காலை 10 மணிக்கு கும்ப
பூஜையுடன் ஆரம்பமாகி பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவ பிரதான பூஜை,
அம்பாளின் வீதியுலா இடம் பெறும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தினமும்
அன்னதானம் வழங்கப்படும் . இரவு நேர பூஜை திருவிழாக்கள் இடம்பெறமாட்டாது
என்று ஆலய பரிபாலன சபைத் தலைவர் கே. ஜெயசிறில் தெரிவித்தார்.




Post A Comment:
0 comments so far,add yours