( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசித்திங்கள்
திருக்குளிர்த்திச்சடங்கு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று (25)
வியாழக்கிழமை ஆலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலய தர்மகத்தாக்களான பிரதம பொறியியலாளர் பரமலிங்கம் இராஜமோகன் மற்றும் இரா.குணசிங்கம் தலைமையில் முதல் முறையாக நடைபெற்றது.
அதன்
போது காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் உள்ளிட்ட திணைக்களத்
தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வருட திருக்குளிர்த்தி விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தனர்.
புனித வாரம் உள்ளிட்ட பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களும் பெறப்பட்டன.
பெருவிழா
எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து
திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன் ஆரம்பமாகின்றது.
இச்சடங்குப்பெருவிழா
தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று ஜுன் மாதம் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.
30ஆம்
திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும்
இடம்பெறும்.தொடர்ந்து புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து
பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம்
பாடலும் இடம்பெறும்.
05ஆம் திகதி திஙகட்கிழமை பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவம் நடைபெறும்.மறுநாள்(6) செவ்வாய் அதிகாலை குளிர்த்தி பாடப்பெறும்.






Post A Comment:
0 comments so far,add yours