( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்ப்பிரிவு கோரக்கோயில் ஸ்ரீ அகோர
மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு சடங்கு இன்று (23) வெள்ளிக்கிழமை கடல்
நீர் எடுத்து வந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று பத்தாம் நாள் ஜூலை மாதம் மூன்றாம் தேதி தீ மிதிப்பு சடங்கு நடைபெற இருக்கிறது.
ஆலய பிரதம பூசகர் முருகேசு ஜெகநாதன் தலைமையில் சடங்குகள் இடம் பெறும்.
நாளை(24)
சனிக்கிழமை பாற்குடபவனி இடம் பெறும். காலை 7 மணியளவில் சம்மாந்துறை
பத்ரகாளியம்மாள் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி ஆரம்பித்து அகோர
மாரியம்மன் ஆலயத்தை வந்தடைய இருக்கிறது.



Post A Comment:
0 comments so far,add yours