கலாசார
அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய இலக்கிய
விழாவின் முதற் கட்ட பிரதேச மட்ட போட்டிகள் நேற்று (31) பிரதேச செயலாளர்
திருமதி சிவப்பிரியா வில்வரத்னமின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கு
பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலக
கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ப. ராஜதிலகன் மற்றும் ப. மயூரவதனன்
ஆகியோர் ஒருங்கிணைப்புச் செய்த இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச
பாடசாலைகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இக்
கலாசார விழாவில் கதை கூறுதல், கிராமிய பாடல் இசைத்தல், கையெழுத்து
போட்டிகள், கிராமிய கதை ஆக்கம், கவிதை, பாடல் நயத்தல் போன்ற பல
போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இப் போட்டிகளில் தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் மாவட்ட மட்ட போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours