(எம்.எம்.றம்ஸீன்)


கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 23 ஆம் வட்டார கிளைகள் புனரமைப்பு சம்பந்தமான கூட்டம்  
அவரது இல்லத்தில் இடம் பெற்றது

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ .எல் .ஏ .மஜீத், கட்சியின் கல்முனை மாநகர சபை முன்னாள் வேட்பாளர் ஏ.எம் பௌமி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சரும், பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.ஐ.எம். பிர்தௌஸ்   அம்பாறை மாவட்ட செயற் குழுவின் செயலாளர் ஏ.சி.சமால்டீன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் இஸ்மாயில்
மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் போராளிகள் இளைஞர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours