(அஸ்ஹர் இப்றாஹிம் ஏ.எஸ்.மெளலானா)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி
திருமதி.சஹிலா இஸ்ஸதீன் தனது கடமைகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைற்றிய டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக இடமாற்றப்பட்டதையடுத்து, ஏற்பட்ட இந்த வெற்றிடத்திற்கு பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக செயற்பட்டு வந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த வைத்திய கலாநிதி
திருமதி.சஹிலா இஸ்ஸதீனுக்கு பணிப்பாளர் பதவியுயர்வு வழங்கப்பட்டு அவர் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த கடமையேற்பு நிகழ்வை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு கேக்வெட்டி இனிப்புப் பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours