( வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் 
கிழக்கு மாகாண இரு மொழிக்கல்வி பாடசாலைகளிடையே தரம் 6-9 வரையான வகுப்பு மாணவரிடையே நடத்தப்பட்ட நிறைபேறான அபிவிருத்தி தொடர்பான முன்வைப்பு(presentation) மாகாண மட்ட  போட்டியில் கல்முனை கார்மேல் பற்றமா கல்லூரி இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளது.

இம் மாகாண மட்ட  போட்டி மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

 கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவர்கள் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. ரெஜினோல்ட் FSC வழிகாட்டலில், இம் முன்வைப்பு போட்டியில்  சிறப்பான முன்வைப்பு களை முன்வைத்தனர்.

தரம் 6 சார்பாக ரி. மிருஷானன், தரம் ஏழு சார்பாக சு.தவேஸ்ஹர், தரம் எட்டு சார்பாக கே பீஷ்மன் , ஏ எஸ் முகமது சுலைம் , தரம் ஒன்பது சார்பாக ஹியூமன் றொட்கர் ஆகிய மாணவர்கள் பங்கு பற்றினர்.

கிழக்கு மாகாண மட்ட போட்டியில் முதல் இடத்தை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியும் இரண்டாம் இடத்தை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியும் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு சிசிலியா மகளிர்  பாடசாலையும் பெற்றுக் கொண்டது.


கல்முனை மாவட்டமட்ட போட்டியிலே கல்முனை கார்மேல் பற்றிமா அணி முதல் இடத்தை பெற்று மாகாண மட்டத்துக்கு தெரிவாக இருந்தமை தெரிந்ததே.

தேசிய மட்ட போட்டி நாளை ஆறாம் தேதி கொழும்பில் செல்வத்தை பத்தரமுல்லயில்  நடைபெறும். இலங்கையின் ஒன்பது மாகாணங்களும் இதில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours