எழில்வேந்தன்


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு  பாடசாலையின் பிரதி அதிபர் இ.ஜீவராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வருடம் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சையில்  வரலாற்று சாதனையாக 9A எனும் விஷேட சித்திபெற்ற மாணவி ரவிச்சந்திரன்-யோகிதா 

புலமைப் பரிசில் பரீட்சையில் '153'புள்ளிகளைப்பெற்று சித்தியெய்திய மாணவன்  விவேகானந்தம்-சுவிஜன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கலாநிதி பட்டப்படிப்பினை பயிலச்சென்ற தம்பிப்பிள்ளை-ரிஷான் 

ஆகியோரிற்கு நினைவுச்சின்னங்களையும்,மலர்மாலைகளையும் அணிவித்து கெளரவிக்கப்பட்டதுடன் மேலும் கல்விப்பொதுத்தர சாதாரணதர பரீட்சையில் சித்தியெய்து உயர்தர கல்விக்கு தெரிவான ஏனைய 17 மாணவர்களுக்கும் பரிசில்பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது

அத்தோடு புலமைப்பரிசில் பரீட்சையில் 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் 10பேருக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வினை நடாத்துவதற்கு பழையமாணவர் சங்கத்திற்கு முழு ஒத்தாசினை வழங்கிய பாடசாலை நிர்வாகத்திற்கும்இபழையமாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்  பகுதியளவிலான நிதியுதவியினை வழங்கிய இரெத்தினசிங்கம் - அனுஜன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்






















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours