கமல்
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோட்டைக்கல்லாறு பாலத்தடியில் முச்சக்கர வண்டியொன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதியதனால் இடம் பெற்ற விபத்து சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் களுவாஞ்சிகு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
நேற்று அதாவது திங்கட்கிழமை க இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கல்முனையை
நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியானது அதே திசையில்
பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியதனால் துவிச்சக்கர
வண்டியில் பயணித்தவர் தூக்கியெறியப்பட்ட நிலையில் பலத்தின் அருகாமையில்
அமைந்துள்ள தூண் ஒன்றின் மீது தலை மோதி பலத்த காயமடைந்துள்ளனர். அதே வேளை
முச்சக்கர வண்டியும் தூணில் மோதி கவுழ்ந்து விழுந்ததில் முச்சக்கர
வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் சிறுகாயமடைந்த நிலையில்
மீட்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்..
Post A Comment:
0 comments so far,add yours