கமல்
கல்முனை தமிழரசுக் கட்சிக் கிளை கூட்டத்தில் சுமந்திரனை ஆதரிக்க முடிவு. என வெளியாகிய செய்தியில் எவ்விதமான உண்மையுமில்லை எனவும் இவ்வாறான கட்சி ஐனாயக பண்புகளுக்கு விரோதமான செய்தியினை வன்மையாக கண்டிப்பதாக கல்முனை தமிழரசுக் கட்சி கிளையின் செயலாளர் வே.அரவிந்தன் அவர்கள் தெரிவித்தார்.
தமிழரசுக்
கட்சியின் கல்முனை கிளை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது இக்
கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவராவதற்கு கல்முனை கிளை பூரண ஆதரவு
வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
நாங்கள்
எமது கிளை கூட்டத்தினை கூட்டும் முன்பே இக் கூட்டம் ஏன் கூட்டபடுகின்றது.
என்ற பல கேள்விகள் எழுந்தன இது தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானமாக
இருந்தோம். இக் கூட்டத்தில் எமது வட்டார கிளையில் காணப்படும் குறைபாடுகள்
மற்றும் அங்கத்துவத்தினை எவ்வாறு கூட்டுவது என்பது தொடர்பிலும், கட்சியில்
இருந்து மாற்று கட்சிகளுக்கு ஆதரவு வழங்குதல் கட்சி மாறுதல் போன்ற
விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலுமே இக் கூட்டத்தில்
ஆராய்ந்தோமே தவிர. வேறு எவ்விதமான முடிவுகளை நாங்கள் இக் கூட்டத்தில்
எடுக்கவில்லை. இச் செய்தியை வழங்கியவரிடம் நான் கேட்டேன் அவர் தான் அச்
செய்தியை வழங்கவில்லை அச் செய்திக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என
அவர் தெரிவித்தார்.
இவ்வாறான
செய்திகள் கட்சிக்குள் பிரிவினையை உண்டு பண்ணுவதாக அமையும் எமது கட்சிக்கு
யார் தலைவராக வந்தாலும் நாங்கள் அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடன்
இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் எவரும் கட்சி
ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டு கட்சிக்குள் பிரிவினை உருவாகுவதற்கு
ஒருபோதும் இடமளிக்கும் மாட்டோம் அவ்வாறு செயற்படவும் மாட்டோம் என அவர்
இதன்போது தெரிவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours