மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்திலே இராகலை நகரில் டெல்மார் பிரதேசம் அமையப்பெற்றுள்ளது. கல்வியில் காணப்பட்ட பின்னடைவு நிலையை நிவர்த்தி செய்யும் முகமாக எமது ஊரில் கல்வி கற்று பல்கலைக்கழகம் மற்றும் கல்வியில் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவ மாணவிகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட அமைப்பே வள்ளுவர் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆகும். வள்ளுவர் கல்வி அபிவிருத்தி மன்றமானது கடந்த 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டடு பல செயட்பாடுகளில் ஒன்றாக டெல்மார் பிரதேசத்திற்கான திறன் வகுப்பறை உருவாக்கம் காணப்படுகின்றது. 

திறன் வகுப்பறையானது எம் மாணவர்களுக்கு இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானதொன்றாகக் காணப்படுகிறது. இது மாணவர்களின் இணையவழி கற்றல் நடவடிக்கைகளுக்கும் மாணவர்களின் தேடல்களுக்கும் மிக பயனுடையதாக காணப்படும் என்ற நோக்கத்தோடு வள்ளுவர் திறன் வகுப்பறையும் எம்மால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு வலப்பனை கல்வி வலய கோட்டக் கல்வி பணிப்பாளர் திருவாளர் யோகராஜா விசேட அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இவர் தமது பிரதம உரையில் இந்த திறன் வகுப்பறையானது எமது பிரதேசத்திற்கு கிடைத்த பெரும் உதவியாகும். இந்த வகுப்பறையைப் பாவித்து எமது மாணவர்கள் கல்வியில் மேம்படவும் இதற்கு உதவி செய்த Ratnam Foundation, Vision Global Empowerment, Mr W. Harichandran ( USA )

 அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். எம் பாடசாலை அதிபர் திரு நந்தகுமார் அவர்களும்இ தோட்ட பொதுமக்களும்இ மன்றத்தின் ஏனைய உறுப்பினர்களும்இ ஏனைய தன்னார்வலர்களும் கலந்து சிறப்பித்தினார். 











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours