(அஸ்ஹர் இப்றாஹிம்)

2023 சிறுவர் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுக்குழு அலுவலகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி, நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பேச்சுகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டமைக்கான  எஸ்.எம். திஹ்யா என்ற சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய தரம் 3 மாணவனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சக்தியைப் பாதுகாக்க, கழிவுகளைக் குறைக்க மற்றும் சூழலுக்கு இசைவான இல்லச் செயற்பாடுகளுக்கு பிள்ளைகளின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளை மையமாக வைத்து நடாத்தப்பட்ட 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 
பசுமை நிகழ்நிலை (மொபைல்) போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு டிசம்பர் 16 கொழும்பில் உள்ள Hatch Works நிலையத்தில் நடைபெற்றபோது European Union Delegation to Sri Lanka and the Maldives, Head of Coorperation Dr. Johann H. Hesse அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

"ஒவ்வொரு செயலும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான பூமியை நோக்கி எனும் உலகத்தை தொடர்ந்து வளர்ப்போம்" என்பதன் ஊடாக உலகை பசுமையான இடமாக மாற்றுவதற்கான பிள்ளைகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் பொருட்டு பரிசளிப்பு மற்றும் பசுமைசார் செயற்பாடுகள் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இவர் சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் இளம் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours