(எம்.எம்.றம்ஸீன்)
கிழக்கு மாகாண மீன் பிடித் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக கல்முனை பிராந்திய மீன்பிடித் திணைக்களமும், நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நன்னீர் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
PSDG நிறுவனத்தின் இன் நிதியுதவியின் கீழ் முதற்கட்டமாக நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நாவிதன்வெளி-01 மற்றும் அன்னமலை-01 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள பெரிய குளங்களில் 10000 மீன் குஞ்சுகள் வீதம் விடப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, குறித்த கிராம அலுவலர் பிரிவுகளிற்கான பொருளாதர அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மீன்பிடி சங்க உறுப்பினர்களும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours