(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு
மாவட்டத்தில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் வீடுகளை திருத்தம்
செய்வதற்காக வீடமைப்பு அதிகார சபையினால் ஒரு இலட்சத்தி ஐம்பது ஆயிரம் ரூபா
பெறுமதியான காசோலை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
ரணில்
2024 செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கணபதிப்பிள்ளை மோகன்
அவர்களின் முயற்சியின் பலனாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம்
ஈட்டும் குடும்பங்களின் வீடுகளை திருத்தம் செய்வதற்காக வீடமைப்பு அதிகார
சபையினால் ஒரு இலட்சத்தி ஐம்பது ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கும்
நிகழ்வு இன்று 29.12.2023 திகதி மட்டக்களப்பு செங்கலடியில்
இடம்பெற்றுள்ளது.
ரணில் 2024 செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர்
கணபதிப்பிள்ளை மோகன் அவர்களது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக
கணபதிப்பிள்ளை மோகன் அவர்களது செங்கலடியில் உள்ள அலுவலகத்தில் குறித்த
காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours