(வி.ரி.சகாதேவராஜா)


 ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு  நிறைவு விழாத்தொடரை ஆரம்பித்து வைக்குமுகமாக  இன்று(1) திங்கட்கிழமை  மட்டக்களப்பு கல்லடி பாலத்தில், இராமகிருஷ்ணமிஷனை ஸ்தாபித்த வீரத் துறவி சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு அடிக்கல் நடப்பட இருக்கிறது.

இன்று பகவான் ராமகிருஷ்ணரின் கல்ப தரு தினம் ஆகும்.

இன்றைய தினம், மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் அரச அதிபர் உயர் அதிகாரிகள் மற்றும் இகிமிசன் அபிமானிகள் சகிதம் சுவாமி விவேகானந்தரின் சிலை கல்லடி பாலத்தில் நிறுவப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து கல்பதரு தினத்தில் அடுத்த நிகழ்வாக, கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் ராமகிருஷ்ண மிஷன் உடன் இணைந்து நடத்தும் தையல் மனையியல் மற்றும் கைவினைப் பொருள் பயிற்சி நெறி அங்குரார் பண வைபவம் கிரானில் நடைபெற இருக்கின்றது.

இந்த நிகழ்வு கிரான் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் நடைபெற இருக்கின்றது.

 பிரதம அதிதிகளாக ராமேஸ்மிஷன் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் மற்றும் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்த  ஜீ மகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.
 சிறப்பு அதிதியாக உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா கலந்து சிறப்பிக்கிறார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours