(அஸ்ஹர் இப்றாஹிம்)



நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் பலத்த மழையினால் இங்கினியாகல் டீ.எஸ்.சேனநாயக சமுத்திரத்தின் நீர் மட்டமும் 100.7 அடி உயரத்திற்கு அதிகரித்துள்ளதால் 
கல்ஓயா சுற்று வட்டத்திலுள்ள பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட செயலக அதிபர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். 

டீ.எஸ்.சேனநாயக சமுத்திரத்தின் நீர் மட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் அம்பாறை
 மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் சுதத் கமகே , நீர்ப்பாசன பொறியியலாளர்  வசந்த உட்பட உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக் கிழமை (31) விஜயம் செய்திருந்தனர். 

சமுத்திரத்தின் நீர் மட்டம் 105 அடியை தாண்டும் போது வான் கதவுகள் திறக்கப்பட்ட வேண்டிய நிலமை தோன்றலாம் எனவும் அந்த வேளையில் டீ.எஸ்.சேனநாயக சமுத்திரத்தின் இரு புறமும் வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours