(அஸ்ஹர் இப்றாஹிம்)


குறிப்பாக கடற்கரையை அன்றிய பகுதிகளில் ( கரையிலிருந்து 10m தொடக்கம் 20m வரை ) கடலுக்கு அடியில் காணப்படும் சுண்ணாம்பு கற்கள் ( Coral Reefs) காரணமாக கரைவலைத் தொழிலை தமது  வாழ்வாதாரமாகக் கொண்ட ஏழை மீனவர்கள் சுமார் 3000 பேர் வரை தனது தொழில் மற்றும் வாழ்வாதாரம்  இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். 

இச் சுண்ணாம்புக் கற்கள் காரணமாக மீன்களை வளைந்து கரைக்கு சேர்க்கும் போது மீன்களை சேகரிக்கும் மடி உட்பட பல ரூபா பெறுமதியான  வலைகளை சேதமாவதோடு மீன்களை கரைக்கு கொண்டுவர முடியாது நிலைகள் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கரைவலை மீனவ முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டுவதனால் சாதாரண கூலி மீனவர்கள் தங்களது நாளாந்த வருமானத்தை இழந்தவர்களாக உள்ளனர் இதனால் இவர்களின் பிள்ளைகளின் கல்வி,  சுகாதாரம், போசணை பாதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. 

இவ்வகை சுண்ணாம்புக் கற்கள்  கல்முனையில் இருந்து நிந்தவூர் பிரதேசம் வரையிலான கடல் பகுதிகளில் சமார் 15 தொடக்கம் 20 இடங்களில் காணப்படுவதாக பிரதேச மீனவர்கள் இக்கற்களை அடையாளம் கண்டுள்ளனர்.  

இவற்றுக்கான தீர்வு இக்கற்களை முற்றாக  அகற்றாமல்  நீண்ட கூரிய பகுதிகளை அகற்றினால் போதுமானதாகும் என மீனவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

இதனால் கரைவலை மீன்பிடித் தொழிலை முன்னர் போன்று செயற்படுத்துவதன் மூலம் பல மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என எதிர் பார்க்கின்றனர். அத்துடன் இச் சுண்ணாம்பு கற்கல் சீர்செய்யப்படா விடத்து குறிப்பாக காரைதீவு போன்ற பிரதேசங்களில் கரைவலைத் தொழில் எதிர்காலத்தில் முற்றாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பலர் கரைவலை மீன்பிடி தொழிலை இழக்க வேண்டி ஏற்படலாம். 

எனவே சம்பந்தப்பட்ட கல்முனை பிராந்திய மீன்பிடித்துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சு இது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுமாறு பிரதேச மீனவ சமூகம் கேட்டுள்ளது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours