(சுமன்)
இன்றைய தினம் முல்லைத்தீவு
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்தையன்கட்டு கிராமத்தில்
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில்
கிராம மக்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்புப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு
முன்னெடுக்கப்பட்டது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்
புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா அவர்களின் ஏற்பாட்டில்
புலம்பெயர் அமைப்புகளின் உதவிகளுடன் மேற்படி உதவித் திட்டம்
முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா கருத்துத் தெரிவிக்கையில்,
இறுதிய
வரை நாங்கள் மக்களுக்காகப் போராடியவர்கள். இன்றும் எமது மக்களுக்காக
ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் கஸ்டங்கள்
என்னவென்று எங்களுக்குத் தெரியும். போராளிகளாகிய எங்களுக்கு ஒருபோதும்
நடிக்கத் தெரியாது.
இன்று எமது மக்களுக்குள் ஒற்றுமை இல்லை. எமது
மக்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்த புலிகளால் மாத்திரமே முடியும்.
புலிகளுக்கு மாத்திரமே எமது மக்கள் கட்டுப்படுவார்கள். அது ஆயுத ரீதியானதாக
அல்ல. இன்றைய நிலையில் ஆயுதத்தை எவரும் விரும்பமாட்டார்கள். நாங்களும்
விரும்பவில்லை. ஆனால் ஜனநாயக ரீதியில் எமக்குள்ள ஜனநாயக உரிமையைக் கொண்டு
எமது மக்களை ஒரு நிலைக்குள் கொண்டு வர புலிகளால் முடியும்.
எமது
மக்களை இன்னும் இன்னும் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைமையில் இருந்து மீட்க
வேண்டும். நாங்கள் எமது மக்களின் வலிகளைச் சுமந்த போராளிகள். இன்றைய தினம்
எந்தவொரு அரசியல்வாதியோ, அரசாங்கமோ கொடுக்காத ஒரு உதவித் திட்டத்தை
புலிகள் கட்சி ரீதியல் நாங்கள் கொடுக்கின்றோம்.
தற்போதை நிலையில்
மக்கள் படும் துயரங்களுக்கு மத்தியில் 2009 ஆயுதம் மௌனிக்கப்பட்டதன் பின்
புலிகளின் பயணம் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படடு வருகின்றது. விடுதலைப்
புலிகள் என்ற அடையாளத்தை அழியாமல் நிலைநாட்டுவதுடன் எமது ஆடையாளத்தை தாங்கி
நின்று எமது கட்சியினூடாக நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
இன்று
வரை நாங்கள் எமது அடையாளத்தைச் சுமந்து சென்று கொண்டிருக்கின்றோம். ஆனால்
எமது மக்களுக்கான தலைமைத்துவம் என்ற ஒன்று தற்போது இல்லை என்ற நிலைப்பாடும்
ஏக்கமுமே எமது மக்கள் மத்தியில் இருக்கின்றது.
எங்களின் பணியானது
பல வருடங்களின் பின்னர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில்
ஆரம்பித்திருக்கின்றது. இப்பணியானது எமது மக்களின் வாழ்வாதார நிலைக்கு
ஒத்துழைப்பு வழங்கும் முகமாக சாதாரணமாக ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பம் 20
நாளைக்கு சமாளிக்கும் விதத்திலேயான ஒரு பொதியினை இன்று நாங்கள் வழங்கி
வைத்துள்ளோம். அரசாங்கமோ எந்தவொரு அரசியற் தலைவர்களோ செய்ய முடியாத அளவிலான
உதவித் திட்டத்தினை இன்று நாங்கள் புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன்
செய்திருக்கின்றோம். இதனையிட்டு போராளிகள் என்ற ரீதியில் நாங்கள்
பெருமகிழ்ச்சி அடைகின்றாம் என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours