வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாசிவன் தீவு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரொருவர் சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் வெள்ள நீரில் நீச்சலாடிய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,கல்குடா சுழியோடிகள் சடலத்தை மீட்டுள்ளதுடன் , இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours