(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு
மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமாணி
பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை இடம் பெற்றது.
மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்ளின் ஆலோசனை மற்றும்
வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி
ஸ்ரீகாந்தின் ஏற்பாட்டில்
மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை
மேற்கொள்வதற்காகன முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி மாவட்ட செயலக
மாநாட்டு மண்டபத்தில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் இன்று
(12) திகதி இடம் பெற்றது.
நான்கு மாதங்களை கொண்ட இவ் பயிற்ச்சி நெறியில் தெரிவு செய்யப்பட்ட 50 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் போதைப் பொருள் முற்தடுப்பு செயற்றிட்டத்தை வலுவூட்டும் செயற்றிட்டமாக இவ் பயிற்சி பாசறையாகவுள்ளது.
கிராம,
பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு தேவையாக
விழிப்புணர்வுகள் இவ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளவுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் வளவாளராக மதுசாரம்
மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி.றஹீம்,
மாவட்ட போதைப் பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஷ் , மதுசாரம்
மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய திட்ட அதிகாரிகளான எஸ். நிதர்சனா மற்றும்
எம். சுசந்தன், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், சமூதாயாசார்
சீர்திருத்த உத்தியோகத்தர்கள், என பலர் கலந்து கொண்டனர்.


.jpeg)

Post A Comment:
0 comments so far,add yours