(எம்.எம்.றம்ஸீன்)


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 750000/=பங்களிப்போடு நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் காரைதீவு.11,12ம் பிரிவு களில் திறந்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. 

இந் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .

இதில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் சமுர்த்தி பதில் பணிப்பாளருமான திரு வேதநாயகம் யெகதீஸன்  கலந்து கொண்டார்.

அத்துடன் சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர்,சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours