எதிர்வரும்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (11) வெள்ளிக்கிழமை
அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர் .
கிழக்கு
மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள்
தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராஜா உள்ளிட்ட பத்து பேர் வேட்புமனுவில்
ஒப்பமிட்டிருந்தனர்.
சங்கு
சின்னத்தில் போட்டியிடும் வேட்புமனுவில் சோமசுந்தரம் புஷ்ப ராஜா, சபாபதி
நேசராசா, கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை , கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்,
சிந்தாத்துரை துரை சிங்கம், சுப்பிரமணியம் தவமணி, தியாகராஜா கார்த்திக்
,ராஜகுமார் பிரகாஷ் ,செல்லத்தம்பி புகனேஸ்வரி, பாலசுந்தரம் பரமேஸ்வரன்
ஆகியோர் ஒப்பிட்டுள்ளனர்.
இன்று பகல் 11.30 மணியளவில் வேட்பாளர் பட்டியல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours