சம்மாந்துறை
வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலை வரலாற்றில்
முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவிகள் சித்தி
அடைந்துள்ளார்கள்.
மல்லிகைத்தீவு அ.த.க.பாடசாலையின் அதிபர் எஸ்.ஜதீஸ்வரா இத்தகவலை நேற்று ஊர்ஜிதப்படுத்தினார்.
உருத்திரமூர்த்தி சபிக்ஷனா என்ற மாணவி 144 புள்ளிகளையும், ராஜு சஞ்ஷனா என்ற மாணவி 146 புள்ளிகளையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர் .
அதிபர் ஜதீஸ்வரா கருத்துத் தெரிவிக்கையில்..
பாடசாலையின்
75 வருட கால வரலாற்றில் முதல் தடவையாக இந்த இரண்டு மாணவிகள் சித்தி
அடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் . போக்குவரத்து வசதி ரியூசன்
வசதி இல்லாத இப் பகுதியில் படைத்த இச் சாதனை எமக்கு பெருமையை தேடித்
தந்துள்ளது. இவர்களை
உருத்திரமூர்த்தி ஆசிரியர் கற்பித்தார்.
மாணவர்கள் பெற்றோர்கள் உதவிய ஏனைய ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours