நூருல் ஹுதா உமர்



மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம் ஐ எம்.ஜெம்சித் இன்று 27.01.2025  கடமை ஏற்றுக் கொண்டார் .

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் நீண்ட காலம் சேவையாற்றி பல அனுபவமும் திறமையும் கொண்ட இவர், நேர்மையான தவறாத உத்தியோகத்தர் ஆவார்

இவரது கடமையேற்பு நிகழ்வில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். சிராஜ், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஹில்மி உட்பட நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் புதிய செயலாளர்  வரவேற்றக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours