(க.விஜயரெத்தினம்)

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 20 வது ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு  செவ்வாய்க்கிழமை(29)மாலை 4.30. மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.

 மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.

சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,ஈகைச் சுடர் ஏற்றி,மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டு ஊடக அமையம்,
மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த  ஏற்பாட்டில் இடம்பெற்ற  நினைவேந்தல்  நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர்  பா.அரியநேந்திரன்  , சுதந்திர ஊடக இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் லக்ஸ்மன் ,உட்பட மாவட்ட  ஊடகவியலாளர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனதுடன் தராக்கி சிவராமின் சமூக நலன்,தமிழ்பற்று,தமிழினத்தின் கெடுபிடிகள்,பேனா முனையின் சாதனைகள் இங்கு அதிதிகளினால் உணர்வுரீதியாக உரையாற்றப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours