துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் உடற்பயிற்சி மாதத்தை புத்துயிர் ஊட்டும் வகையில் துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள்  தாதியர்கள் மருத்துவ மாதுக்கள் சுகாதார ஊழியர்கள் மற்றும் வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் இணைந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் நற்பயன் மிக்க நடைபயணம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது

உடல் உழைப்பை தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை உள்ளூர் சமூகத்தினருக்கு வலியுறுத்தி அவர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.  

இந்த நடைப்பயணம் பிரதேச வைத்திய சாலையில் ஆரம்பித்து  கிராமத்தின் ஊடாக கிராமத்தின்  எல்லை வரை சென்று திரும்பியது.

இதன்போது சிறிய படிகள் தான் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம். அதிகம் நடப்பது போன்ற எளிய பழக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமூகத்தை கட்டியெழுப்ப நாங்கள் விரும்புகிறோம். சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி நடைபயணம் செய்வோம்! போன்ற பதாதைகளை ஏந்தியவாறு நடைபயணம் இடம்பெற்றது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours