க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு  புதுமண்டபத்தடி சமுர்த்தி வங்கிப் பிரிவினரால் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு கொடி தினம்  ஆரம்பமானது.

சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு சமுர்த்தி  கொடிதின நிகழ்வு மட்டக்களப்பு  புதுமண்டபத்தடி சமுர்த்தி வங்கிப் பிரிவினரால் சனிக்கிழமை (31)முன்னெடுக்கப்பட்டது.


சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் வருடந்தோறும் , புகைத்தல்,மது ஒழிப்பு தின  நிகழ்வு கொடி விற்பனை செய்யப்பட்டதுடன் போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வும்
இடம் பெற்றது.சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைய சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம். தமயந்தி தலைமையில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் சமுர்த்தியோகத்தர்கள், வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இலங்கையில் புகைத்தலால் வருடாந்தம் 20,000பேர் உயிரிழப்பதோடு நாளொன்றுக்கு 520 மில்லியன் புகைத்தலுக்கு செலவு செய்வதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்தியநிலையம் தெரிவிக்கின்றது.இளைஞர்களை இலக்கு வைத்து புகைத்தல் விற்பனையானது சூட்சுமமானமுறையில் இடம்பெற்று வருவதாக புள்ளிவிபரத்தகவல்கள் தெரிவிக்கின்றது.மே 31 தொடக்கம் யூன் 17ம் திகதி வரை
புகைத்தல்,மது ஒழிப்பு கொடி தின நிகழ்வு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours