நூருல் ஹுதா உமர் 

அம்பாரை, பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் 40 ஆண்டு கால வரலாற்றில் முதற் தடவையாக இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்று (01) கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் திகாமடுள்ள மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய இல்லங்களுக்கும், வீரர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தார்.

இதன்போது கல்லூரியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான எச்.எல். பஷீர் (ஷர்க்கி), பணிப்பாளர் சபையின் தலைவர் அஷ்ஷேய்ஹ் எம்.எச்.எம். இத்ரீஸ் (ஸஹ்வி), கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஆர். றமீன் (மதனி) மற்றும் ஏனைய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours