மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி மற்றும் அம்பந்தனாவெளி ஆகிய பகுதிகளில் மிகவு வறிய நிலையில் உள்ள குடிநீரைப் பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்கொண்ட இரு குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
சுவிஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் க.துரைநாயகத்தின் மகனும் தாய்ச்சங்க உறுப்பினர் து.கிருபானந்த்-றுஜோனி தம்பதியினரால் இந்த குடிநீர் திட்டத்திற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் செயலாளர் க.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிருபானந்த்-றுஜோனி தம்பதியினர் கலந்துகொண்டதுடன் சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளர் நடனசபேசன் பொருளாளர் ஹருஸ்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது குடிநீர் விநியோக திட்டங்கள் பயனாளிகளின் கைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதேபோன்று கதிரவெளி பகுதியில் உள்ள மாணவர்களின் நன்மை கருதி ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் கிருபானந்த்-றுஜோனி தம்பதியினரால் கதிரவெளி பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டது.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours