பாறுக் ஷிஹான்

 தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 1ம் நாளான்று  'வீதி பாதுகாப்பு தினம்' நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய  நிந்தவூர் சுகாதார  வைத்திய அதிகாரி டாக்டர்  திருமதி ஜே. சிவசுப்ரமணியம்   தலைமையில் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டு தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு  இன்று "வீதி ஒழுங்கு முறைகளை கடைப்பிடித்து வீதி விபத்தை தடுப்போம்" எனும் கருப்பொருளின் கீழ் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் நிந்தவூர் பொலீஸ் நிலையமும்  இணைந்து, விசேட விழிப்புணர்வு நடவடிக்கையை நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்தன.


இந்த நிகழ்வில், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்,  பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் நிந்தவூர் பொலீஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது சாரதிகளுக்கு முறையாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணிதல், வீதி சமிக்ஞைகளை கடைப்பிடித்தல் , வேகமாக வாகனம் செலுத்துவதை தவிர்த்தல் போன்ற பல்வேறுபட்ட அறிவுரைகள் எம்மால் வழங்கப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours