எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டடம்
சுற்றாடல் அமைச்சர் கலாநிதி பீ.தம்மிக்க அவர்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்  தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி  அவர்களின் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.      

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளீதரன் அவர்களது ஏற்பாட்டில்
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) திகதி காலை 9.30 மணி முதல் குறித்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.  

இதன்போது சுற்றாடல் அமைச்சர், சுற்றாடல் பிரதி அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுனர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இரா.சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ்,  ஆகியோர்  கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது காணிப் பிரச்சினை, வனவள பாதுகாப்பு, மணல் அகழ்வு, யானை முதலை பிரச்சினைகள், உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் கழிவகற்றல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இதன் போது அமைச்சர்களினால் முன்வைக்கப்பட்டதுடன் சில பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனைக்கு அமைவாக குழுக்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours