( வி.ரி.சகாதேவராஜா)
 காரைதீவைச் சேர்ந்த ஆசிரியை திருமதி.மலர்விழி செந்தில்வண்ணன் 33 வருடகால அரச ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.

 தனது ஆசிரியர் சேவைக்காலத்தில் கிட்டத்தட்ட சுமார் 21 வருட காலம் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்திலே கடமையாற்றி இறுதியாக அங்கிருந்தே தனது 56வது வயதில் ஓய்வு பெற்றார்.

இவர் ஒரு ஆரம்பக்கல்வி ஆசிரியராக மிகவும் திறமையான தனது ஆசிரியர் பணியை மாணவர்களுக்காக வழங்கினார் மற்றும் பல்வேறு மாணவர்களை பல்வேறு துறைகளுக்கு செல்ல அடித்தளம் இட்டார்.

இவரை கௌரவிக்கும் நிகழ்வு காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.இதில் அவருக்கான பாராட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து 
வழங்கியதோடு அவருக்கான வாழ்த்துப்பா வழங்கியதோடு ஆசிரியர்களால் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours