(எஸ்.அஷ்ரப்கான்)

ஒலுவில் அஷ்ரப் நகரில் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ 
நிலையத்தில் நேற்று (31) அதிகாலைதிடீரென்று தீ பரவியது.
அக்கரைப்பற்று  மாநகர சபை தீயணைப்பு பிரிவின் உதவியோடு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இதன் போது அட்டாளைச்சேனை  பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ்  அவர்கள் மற்றும் பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் அவர்கள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ பொறுப்பாளர் எம்.இர்பான்,  வேலைத்தள மேற்பார்வைளர் எம்.ஏ. மனாப் 
உட்பட ஏனைய ஊழியர்களும், பாலமுனை இளைஞர்களும் தங்களின் பங்களிப்பை செய்தனர்.

நள்ளிரவிலும் மக்களுக்காக சேவையாற்றும் மாநகர சபை தீயணைப்பு ஊழியர்களுக்கும், அதன்  முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா  அவர்களுக்கும்  தவிசாளர் மற்றும்  பிரதித் தவிசாளர் ஆகியோர் நன்றிகளை தெரிவித்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours