( வி.ரி.சகாதேவராஜா)


க.பொ.த.சாதாரண தர 2024 பரீட்சை
முடிவுகளுக்கமைய முதற் தடவையில்
கூடிய மாணவர்களை க.பொ.த.உயர்தர வகுப்புகளில் கல்விகற்க வாய்ப்பை அளித்த தேசிய மட்டத்தில் முதல் பத்து
 வலயங்கள் பற்றிய தகவலை பரீட்சைத் 
திணைக்களம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி முதலிடத்தை கண்டி வலயமும், இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு வலயமும், மூன்றாவது இடத்தினை மட்டக்களப்பு மத்தி வலயமும் பெற்றுக் கொண்டன.

நான்காம் இடத்தை கல்முனை வலயமும், ஐந்தாவது இடத்தை திருக்கோவில் வலயமும், ஆறாவது இடத்தை அக்கரைப்பற்று வலயமும் பெற்றுக் கொண்டன.

மொத்தத்தில் முதல் பத்து இடங்களில் ஐந்து வலயங்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலயங்கள் என்பதும் வடக்கில் இருந்து எந்தவொரு வலயமும் இந்த முதல் பத்து வலயங்களில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours