போரதீவுப் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சின்னவத்தைப் பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிப்பதுடன் அண்மைக்காலமாக சின்னவத்தை  வட்டார பிரதேசசபை உறுப்பினர் கா.யோகராசா அவர்களது கோரிக்கையின் பிரகாரம் போராதீவுப்பற்று பிரதேசசபையினர் யானைகளைத்துரத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

வெல்லாவெளி வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கு வாகனத் தட்டுப்பாடு வருகின்றபோதெல்லாம் அவர்களுடன் இணைந்து போரதீவுப்பற்று பிரதேசசபை பிரதித் தவிசாளர் கஜசீலன் மற்றும் வெல்லாவெளி தமிழரசுக்கட்சி கிளைத் தலைவர் பிரதீப்குமர் அவர்களது வாகனத்தினைப் ; பயன்படுத்தி யானைகளைத்துரத்தும் செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours