திருகோணமலை கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை சுமார் 4.06 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்கமானிகளாலும் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours