(சுமன்)



பாடசாலையின் நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் குறித்து ஆராயும் முகமாக பா.உ க.பிரபு பட்டிருப்பு மகா வித்தியாலத்திற்கு நேரடி விஜயம்... 

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் குறித்து ஆராயும் முகமாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இன்றைய தினம் குறித்த பாடசாலைக்கு

கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பாடசாலை சமூகத்தினரால் பாராளுமன்ற உறுப்பினர் வரவேற்கப்பட்டதுடன், பாடசாலயின் செயற்பாடுகள் குறித்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார்.

இதன் போது, பாடசாலையின் வளப் பற்றாக்குறைகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விசார் தேவைகள் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்ததுடன், பாடசாலையில் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள புதிய கேட்போர் கூடத்திற்கான இடத்தினையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின் போது, மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான சலாக்கியராஜ் மற்றும் திருமதி துவேனிகா ருக்மாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக விரைவில் தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours