சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் வாணிவிழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிநிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தடம் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பெரியகல்லாற்றினைச் சேர்ந்த அவுஸ்ரெலியாவில் வசிக்கும் சமூகசேவகர் இ.நிறஞ்சன் அவர்களது நிதி உதவி மூலம் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 1 ஆம் திகதி அதிபர் க.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது. 
தடம் அமைப்பின் தலைவர் நிறஞ்சன் அவர்களிடம் பாடசாலையின் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்ததன் காரணாமாக இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.
சமூக சேவகர் இ.நிறஞ்சன் அவர்கள் தடம் அமைப்பின் ஊடாக தனது பெரிய கல்லாறு கிராமத்திற்கு இச்சேவையினை ஆரம்பித்து இன்று தேசிய ரீதியில் பரந்துபட்டதாக அமைந்துள்ளமையினை நாவிதன்வெளிப்பிரதேச கல்விச் சமூகம் பாராட்டியுள்ளது.
இந்நிகழ்வில் மாணவர்களது விஷேட கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வுக்கு அதிதியாக நாடறிந்த கவிஞர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் கலந்து சிறப்பித்தார்




























Post A Comment:
0 comments so far,add yours