( வி.ரி.சகாதேவராஜா)

சமகாலத்தில் நிலவும் சமகாலத்தில்  கடல் சீற்றத்தில் சிக்கி  மற்றும் ஒரு ஆழ்கடல் இயந்திரப் படகு காரைதீவில் கரையொதுங்கியது.


இச் சம்பவம் இன்று சனிக்கிழமை காலை காரைதீவு கடற்படை முகாமிற்கு பின்னாலுள்ள கடற் பகுதியில் சம்பவித்துள்ளது.

இப் படகு சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜலீல் என்பவரினுடையது எனத் தெரிகிறது.


 விபத்துக்குள்ளான படகினை  மீட்க  நடவடிக்கை எடுக்க படுகின்றன.

 ஏலவே  நேற்று இரவு காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளாகி ஏறாவூர் சவுக்கடியில் மீட்கப்பட்டமை தெரிந்ததே.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours