நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மத்திய முகாம் நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட பன்னிரண்டாம் கிராமத்தில் விவசாய பாதை ஒன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் அனுசரணையுடன் தன்னால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்திடம் உறுதியளித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகளிடையான முக்கிய சந்திப்பு சனிக்கிழமை (16) காலை அவரது மாளிகைக்காடு அலுவலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.எம். அப்துல் ஜப்பார் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலும் அதனைத் தொடர்ந்து நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் இவற்றுக்கு முன்னோடியாக தற்காலிக அலுவலக வசதிகள், கனரக வாகன வசதிகள் மற்றும் ஆளணி உள்ளிட்ட பௌதீக வளங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் பாராளுமன்ற உறுப்பினரின் வகிபாகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த விடயங்களை மத்திய அரசின் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சு, கிழக்கு மாகாண சபை மற்றும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக துரிதமாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முழுமையான அனுசரணை இன்றியமையாததாகும் என்று சுட்டிக்காட்டிய மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகள், இதற்கு ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் ஜனாதிபதியின் நெருங்கிய தோழராகவும் அதிகாரத்துடன் திகழ்கின்ற அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி அவர்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினர்.
இந்த விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து, செயற்படுத்துவதில் தனக்குள்ள பொறுப்புணர்வையும்ஆர்வத்தையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள், இது தொடர்பிலான தனது நடவடிக்கைகளுக்கு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரதும் சிவில் சமூக அமைப்புகளினதும் முழுமையான ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயத்தில் ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையை தன்னால் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் குறுகிய கால அவசர அழைப்பின் பேரில் இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் இந்த விடயம் தொடர்பில் மறுமலர்ச்சி மன்றத்தின் அனைத்து செயற்பாட்டாளர்கள் மற்றும் போராளிகளையும் ஏனைய அமைப்பினரையும் ஒன்றிணைத்ததாக பரந்துபட்ட கலந்துரையாடல் ஒன்றை விரைவில் ஒழுங்கு செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ். முஹம்மட் குறிப்பிட்டுள்ளார்.
சுமன்)
மட்டக்களப்பில் பிரித்தானிய, கனேடிய தூதுவர்களுடன் தமிழ் அரசுக் கட்சி முக்கிய சந்திப்பு...இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick) மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) ஆகியோருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (04) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறிப்பாக தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு, தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள், தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள், மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் மேய்ச்சல் தரை தொடர்பான இழுபறி நிலை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளின் வீழ்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் அவசியம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் வை.தினேஸ், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் வடகிழக்கு வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மட்டு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையில் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை கௌரவிப்பு
((கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையில் க.பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதன் அதிபர் அருட்சகோதரி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்றது.
இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர், கலந்துகொண்டு 3 ஏ, பெற்று மாவட்டத்தில் 78 வது இடத்தை பெற்ற அந்தனிசில் ராஜ்குமார் யனுஷ்சிகாவுக்கு சாhன்றுதல் வழங்கி கௌரவித்தனர்.
மட்டக்களப்பில் மாவட்டத்தில் யூட்நிமால் அனுஸ்ராம் விஞ்ஞான பாடத்தில் 3 ஏ பெற்று மாவட்டத்தில் முதலிடம்.
(கனகராசா சரவணன்)
வெளிவந்த க.பொ.த உயர்தரப் பிரிவில் விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் யூட்நிமால் அனுஸ்ராம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த நாவற்குடா கணக்குப்பிள்ளை வீதியைச் சோந்த யூட்நிமால் தம்பதிகளின் புதல்வாரன அனுஸ்ராம் பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்று விஞ்ஞான பாடத்தில் மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
நூருல் ஹுதா உமர்
அம்பாறை, 28 மார்ச் 2026 – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2026 மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் “பேரிடர் நிலைத்தன்மைக்கான Geo-AI” (Geo-AI for Disaster Resilience) என்ற தலைப்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப பயிற்சிநெறி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பயிற்சி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு உலக தரமான புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவத்தை வழங்கியது.இந்த தேசிய அளவிலான திட்டத்தை இலங்கையின் அனர்த்த அபாய முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம் (ADRMP) தலைமையில், கொழும்பு பல்கலைக்கழகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுடன் முன்னெடுத்தது. திட்டத்தை அமெரிக்க மாநிலத் துறை பழைய மாணவர்களான டாக்டர் நோவில் விஜேசேகர மற்றும் டாக்டர் அஸ்லம் சாஜா வடிவமைத்து வழிநடத்தினர்.
பயிற்சி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையினால் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் அனுமதியுடன், பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல் (அனர்த்த தடுப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்) மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் ஒருங்கிணைத்தனர்.
தொடக்க விழாவில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், நகர மையங்களுக்கு வெளியே உள்ள மாணவர்களுக்கும் இத்தகைய நவீன தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைப்பது முக்கியம் எனக் குறிப்பிட்டு, தொழில்நுட்ப அறிவும் அனர்த்த முகாமைத்துவ திறன்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
ADRMP செயலாளர் மேனக விஜேசிங்க, இளைஞர்களின் பங்கு அனர்த்த முகாமைத்துவத்தில் மிக முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற பயிற்சியில் சுமார் 20 மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில் தென் கிழக்கு பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனியா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.
ArcGIS தளத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சியை GIS Solutions (Pvt) Ltd நிறுவன நிபுணர்கள் முன்னெடுத்தனர். GIS ஆதரவு பகுப்பாய்வாளர் கணிஷ்க நடீஷன், மாணவர்களுக்கு நடைமுறை அறிவை வழங்குவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.
முதல் நாள் அமர்வுகளில் GIS அடிப்படைகள், பேரிடர் மேலாண்மை, Geo-AI ஒருங்கிணைப்பு, புவியியல் தரவுகள், ArcGIS Pro அறிமுகம், ஒருங்கிணைப்பு அமைப்புகள் (CRS), மற்றும் ஆழ்மையான கற்றல் கருவிகள் கற்பிக்கப்பட்டன. Geo-AI தொடர்பான புதுமை பணிப்பயிற்சியும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் நடைமுறை அமர்வுகளில் பட வகைப்பாடு (Image Classification), பொருள் அடையாளம் காண்தல் (Object Detection), Geo-AI தரவு தயார் செய்தல், வெள்ளப் பகுப்பாய்வு, மாதிரி துல்லிய மதிப்பீடு மற்றும் Model Builder தானியக்க செயல்முறை கற்றுக்கொடுக்கப்பட்டது.
பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், ட்ரோன் தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் இணைப்பதன் மூலம் அனர்த்த காலங்களில் விரைவான தரவு சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் எளிதாகும் என்று விளக்கியார். குறிப்பாக வெள்ள பாதிப்புகளில் Geo-AI பயன்பாடு உயிர்களை காப்பாற்ற உதவும் என அவர் தெரிவித்தார்.
இந்த பயிற்சியை கணிஷ்க நடீஷன், தேஷன் செல்லஹேவா, மினூஷியா ஹசரங்க, அமிஷா பிரத்தியங்க முன்னெடுத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தில்ஷான் லேகம், ரசாங்கனி மதுபானி மற்றும் ரஷ்மினி வாசனா பங்கேற்றனர்.
“Geo-AI for Disaster Resilience” முயற்சி, மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அனர்த்த முகாமைத்துவத்தில் செயல்படக்கூடிய திறமையான நிபுணர்களை உருவாக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.
பல்துறை கலாசார பின்னணிகளை உடைய மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, அறிவு பகிர்வு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஒருங்கிணைக்கும் முன்மாதிரியாக பரவலாக பாராட்டப்பட்டது.
மட்டக்களப்பு துறைநீலாவணை உச்சிமா காளியம்மன் ஆலய பங்குனி உத்தர திருச்சடங்கு 26 ஆம் திகதி வியாழக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெற இருக்கின்றது28 ஆம்திகதி சனிக்கிழமை அம்மன் ஊர்வலமானது துறைநீலாவணை மற்றும் துரைவந்தியமேடு கிராமங்களுக்குச் செல்ல இருப்பதுடன் 1ஆம்திகதி புதன்கிழமை சமூத்திரநீராடல் வட்டுக்குத்துதல் தீமூட்டுதல் போன்ற விசேட நிகழ்வுகளுடன் 2 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகால தீமிதிப்பு வைபவமும் இடம்பெற இருப்பதுடன் பூசை ஒழுங்குகள் பூசகர் பொன்னுத்துரை சிவம் ஐயா தலைமையில் உதவிப்பூசகர் ம.தினேஸ் ஆகியோரும் திருவிழாவுக்கான ஒழுங்குகளை ஆலயத் தலைவர் நாகலிங்கம் மற்றும் நிருவாகத்தினர் மேற்கொண்டு வருகின்றார்




.jpg)





















.jpeg)
.jpg)





.jpeg)















