நூருல் ஹுதா உமர்
நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு நாவிதன்வெளி சுமங்கலா மண்டபத்தில் நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேசத்தின் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் தர்மதாஸ ஆரியதாச ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் உரையாற்றிய அவர்கள், இவ்வாறான மத சார்பற்ற ஒன்றுகூடல்கள் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டனர்.
மேலும், நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கே. புவனரூபன், சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் பி. சதீஷ்கரன், சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, இஸ்லாமிய மதகுருமார்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டு நோன்பின் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் சகவாழ்வு பற்றிய உரைகளையும் விசேட பிரார்த்தனைகளையும் நடத்தினர்.




Post A Comment:
0 comments so far,add yours