நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிருவாகம் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தர அதிகாரியான என் மணிவண்ணன் அவர்களை வாழ்த்தி வரவேற்று இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளது.

இந்த நிகழ்வு (16) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிருவாகம் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

புதிய பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம் அவர்களை வாழ்த்தி வரவேற்கும் முகமாக நேரடியாக சென்ற தொழிற்சங்க நிர்வாகியான இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ சிபான் ஜே பி தலைமையிலான தொழிற்சங்க உறுப்பினர்களால் பிரதிப் பிரதம செயலாளர் - நிருவாகம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதன் போது, பிரதிப் பிரதம செயலாளர் - நிருவாகம் அவர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட தொழிற்சங்க பொது செயலாளர் ஏ சிபான்,

 அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் நேர்மையாக செயல்பட்ட சிரேஷ்ட தர அதிகாரிக்கு பொறுப்பு வாய்ந்த பதவி கிடைத்துள்ளமையை இட்டு எமது தொழிற்சங்கம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours