(கனகராசா சரவணன்) 




மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் ஸ்கானர் இயந்திரம் மற்றும் வான் ஓன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.


பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று அதிகாலை 5.00 மணிக்கு திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் முற்றுகையிட்டனர்.


இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்காவலை, திக்கோடை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்ததுடன் இவர்களிடம் இருந்து ஸ்கானர் இயந்திரம் மற்றும் வான் ஒன்றையும் மீட்டனர்.


இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours