(ரஞ்சன்)
9-ஆம் நாளான இன்று(31.03.2026) மாலை, ஏரிக்கரை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து முத்துச்சப்பிரம் எருது வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா ஆரம்பமானது.
பல்வேறு கலை நிகழ்வுகள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்திப் பரவசத்துடன் வீதி உலா வந்த முத்துச்சப்பிரம் பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது.
இதில் திருப்பழுகாமம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாளை (01.04.2026) புதன்கிழமை அன்று சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
இத்துடன் இந்த ஆண்டிற்கான வருடாந்த மஹோற்சவ பெருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours