((கனகராஜா சரவணன்))
பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமான சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்து 3 பேரை அட்டாளைச்சேனையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கைது செய்ததுடன் 8 ரவைகள் 20 வெற்று ரவைகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு அட்டாளைச்சேனை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு சென்ற கார் ஒன்றினை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அங்கிருந்து 8 சொட்டகண் ரவைகள் மற்றும் 20 வெற்று ரவைகளை மீட்டதுடன் பாணமை பிரதேசத்தைச் சோந்த 3 பேரை கைது செய்தனர். இவார்கள் வியாபாரத்துக்காக சட்டவிரோதமாக கடத்தி வந்துள்ளதாக அதிரடிப்படையினர் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப் பொருட்களை ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours