(கனகராஜா சரவணன்


ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.


பொது மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவல் ஒன்றையடுத்து அந்த பகுதிகு;கு சென்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours